Thursday 29 March 2018

துபாயில் பயன்பாட்டுக்கு வந்துள்ள ஏர் டாக்ஸி



துபாய் நாட்டில் தற்போது ஏர் டாக்ஸி பொது மக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. நமது நாட்டில் ஆட்டோ, டாக்ஸி வாடகைக்கு கிடைப்பது போல் இப்போது துபாய் நாட்டில் ஏர் டாக்ஸி கிடைக்கிறது. ஒருவர் மட்டும் பயணம் செய்யும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.  அதிகபட்சமாக நூறு கிலோ எடை வரை இதில் கொண்டு செல்லலாம் (பயணம் செய்யும் மனிதனின் எடையும் சேர்த்து தான்) 


ஓட்டுனர் இல்லாமல் தானாக இயங்க கூடிய (கட்டுப்பாட்டு அறையில் இருந்து இந்த ஏர் டாக்ஸியை கட்டுப்படுத்தலாம்)  இந்த தானியங்கி ஏர் டாக்ஸியில் நாற்பதில் இருந்து ஐம்பது கிலோமீட்டர் தூரம் வரை இதில் பயணிக்கலாம். 

 பயணி ஏர் டாக்ஸியில்  அமர்ந்த பின்னர், பயணிக்க வேண்டிய இலக்கை தொடுதிரையில்       தெரியும்       மேப்பில்     தேர்வு    செய்தவுடன்   பறக்க 
தொடங்குகிறது. இந்த ஏர் டாக்ஸியில் பொருத்தபட்டுள்ள பேட்டரி சக்தி கொண்டு தொடர்ந்து அரை மணி நேரம் வானில் பறக்க முடியும். டிராபிக் தொந்தரவு எதுவுமில்லாமல் பயணிக்க வேண்டிய இடத்துக்கு தாமதமில்லாமல் சென்று சேர இந்த ஏர் டாக்ஸி பயன்படும் என்று நம்பலாம்.  
-----------------------------------------------------
முந்தைய பதிவுகள்
------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர



--------------------------------------------------------
அமேசான் நிறுவனத்தில் பொருட்கள் வாங்க 
-----------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்