Wednesday 8 November 2017

ஷாக் அடிக்காத மின்சாரம் - ஐந்து அரிய கண்டுபிடிப்புகள்

வீடுகளுக்கு தரப்படும் மின் இணைப்பில் தவறுதலாக எப்போதாவது தெரியாமல் நம் கை பட்டு விட்டால் உடல் பதறி சட்டென்று கையை இழுத்து கொண்டிருப்போம், மின்சாரம் பாயும் வயர்களையோ, பொருட்களையோ தெரியாமல் மிதித்து விட்டால் அதிகளவு மின்சாரம் உடலில் பாய்ந்து மனிதர்கள் உடல் கருகி மரித்து போனதையும் நாம் பார்த்திருக்கிறோம். இன்றைய நாகரிக உலகத்தில் மின்சாரத்தை பயன்படுத்தாமல் நாம் வாழ முடியாது. ஒவ்வொரு நாளும் மின்சாரத்தின் தேவை அதிகரித்து கொண்டே செல்கிறது, ஆனால் சில நேரங்களில் மனித தவறுகளால், மின்சாரம் இப்படி உயிர் கொல்லியாக மாறி உயிர்களை காவு வாங்கி விடுகிறது.



இந்த ஷாக் அடித்து நிகழும் மரணங்களை பார்க்கும் போதெல்லாம் எவ்வளவோ முன்னேறி இருக்கும் விஞ்ஞான உலகில் இந்த ஷாக் பிரச்சினைக்கு தீர்வு கண்டுபிடிக்க முடியாதா என்று வேதனை பட்டிருப்போம், நிஜமாகவே தொட்டால் ஷாக் அடிக்காத கரண்ட்டை விஞ்ஞானி திரு. உமா மகேஷ் அவர்கள் கண்டுபிடித்துள்ளார்.  

ஷாக் அடிக்காத கரண்ட்(நானோ ட்ரான்ஸ்பார்மர்) மட்டுமல்ல  ரீசார்ஜ் செய்ய தேவைபடாத நானோ பேட்டரி, நானோ ஏசி, நானோ பிரிஜ், நானோ வாட்டர் கண்டென்சர் (காற்றிலிருந்து தண்ணீர் தயாரிப்பு) என்று முத்தான ஐந்து கண்டுபிடிப்புகள் பற்றியும் அந்த கருவிகளின் செயல்பாடு பற்றியும் விளக்கம் கொடுத்திருக்கிறார் திரு. உமா மகேஷ். நோய்களை இயற்கையான முறையில் தீர்க்கும் ஹீலர் பாஸ்கர் அவர்கள் திரு. உமா மகேஷ் அவர்களோடு உரையாடி இந்த ஐந்து அரிய கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தும் காணொளி காட்சி:

-----------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்