Wednesday 10 January 2018

டொயோட்டாவின் 'இ-பாலெட்' - தானியங்கி மொபைல் வாகனம்


பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா நிறுவனம் வாகன ஒட்டி இல்லாமல் தானாக இயங்கும் தானியங்கி வாகனத்தை தயாரித்து விற்பனை செய்ய உள்ளது. 'இ-பாலெட்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வாகனம், வரும் 2020 ஆம் ஆண்டு முதல் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. 

நம் ஊரில் மொபைல் வாகனங்களில் வைத்து உணவுபொருட்களை விற்கும்  வியாபாரம் செய்பவர்களை பார்த்திருப்பீர்கள், அதே முறை தான் இது ஆனால் இங்கே வாகனத்தை இயக்க ஆள் தேவையில்லை, தானாகவே இயங்கும் தானியங்கி வாகனம் இது.   

இதன் உள்கட்டமைப்பை நம் தேவைக்கேற்ப சிறிது மாற்றி வடிவமைத்தால் எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்று பாருங்கள்: 



இந்த தானியங்கி வாகனம் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை டெலிவரி செய்யும் டெலிவரி வாகனமாகவும் பயன்படுத்தலாம்.  
  
ஓலா, உபெர் போன்ற வாடகை கார் நிறுவனங்கள் பயணிகள் பகிர்ந்து பயன்படுத்தும் (ரைட் ஷேர் முறையில்) வாடகை காராகவும் பயன்படுத்தலாம்.  

விருந்தினர்கள் தங்கும் மொபைல் ஹோட்டல் ஆகவும் பயன்படுத்தலாம்.

பொருட்கள் விற்பனை செய்யும் மொபைல் சூப்பர் மார்கெட் ஆகவும் பயன்படுத்தலாம்.  
-----------------------------------------------------
முந்தைய பதிவுகள்
------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர



--------------------------------------------------------
அமேசான் நிறுவனத்தில் பொருட்கள் வாங்க 
-----------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்